இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Thakkali Kuzhambu Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனாக செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் உங்கள் வீட்டில் சட்னி, சாம்பார் என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி குழம்பு செய்யுங்கள்.

Thakkali Kuzhambu How To Make Tomato Kulambu For Idli

இப்படி தக்காளி குழம்பை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி இந்த தக்காளி குழம்பை செய்ய சொல்லியும் கேட்பார்கள்.

உங்களுக்கு தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பொடிப்பதற்கு..

* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்

குழம்பு தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பூண்டு - 7 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3-4 டீஸ்பூன்
* அரைத்த பொட்டுக்கடலை
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சீரகத்தை எடுத்துக் கொண்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கீறிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பொட்டுக்கடலையை நீர் சேர்த்து கரைத்து ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 2, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion