Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
4 தக்காளி இருந்தா போதும் இட்லி, தோசைக்கு வெங்காயம், பூண்டு இல்லாத சூப்பரான சட்னி செய்யலாம்... ட்ரை பண்ணுங்க...
Thakkali Karuveppilai Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சரியான மற்றும் எளிமையான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். இட்லி, தோசையை சுவையாக்குவதே அதற்கு பரிமாறப்படும் சட்னிதான். எனவே அந்த சட்னி சுவையானதாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பிரதான பொருட்களாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் இல்லாமலேயே இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை செய்யலாம். வெங்காயமும், பூண்டும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த தக்காளி கறிவேப்பிலை சட்னியானது தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான சட்னியாகும்.

உங்களுக்கு தக்காளி கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கறிவேப்பிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பொடியாக நறுக்கிய தக்காளி - 4
- கறிவேப்பிலை கொத்து - 3
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 சிட்டிகை
- எண்ணெய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வர மிளகாய் -
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை வதங்கியதும் கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.
- கொத்தமல்லி சுருங்கியதும் நறுக்கிய தக்காளியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
- தக்காளி ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சூப்பரான தக்காளி கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இந்த தக்காளி கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











