Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
புளி சட்னி
புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
நீங்கள் சட்னி பிரியரா? இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிட பிடிக்குமா? இதுவரை நீங்கள் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை பயணம் மேற்கொள்ளும் போது எடுத்து செல்ல ஏற்றது. இது 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

உங்களுக்கு புளி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக் வேண்டும்.
* பின்னர் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான புளி சட்னி தயார்.
குறிப்பு:
* பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதிகமாக புளி சேர்க்க வேண்டாம்.
* தேங்காயை அளவுக்கு அதிகமாக வறுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை மாறிவிடும்.
* தாளிக்கும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இன்னும் நல்ல ப்ளேவர் கிடைக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











