Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?
நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம்.
தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம்.
இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம்.

செய் முறை :
முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசையுங்கள்.

செய் முறை :
பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக அடித்து பிசைந்து, மாவை ஒரு பக்கம் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

செய்முறை :
பின்பு கொதிக்கும் நீரில் வெல்லம் கலந்து கரையும் வரையில் ஒரு கொதி விடுங்கள்.

செய்முறை :
கல், மண் களைய அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்ல நீரை ஊற்றி கெட்டியாகும் பதம் வரை கொதிக்க விடுங்கள்.

செய்முறை :
லேசாக கெட்டிபதத்தில் வரும்போது தேங்காய் துறுவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
ஒன்றாக சேர்ந்து பூரணம் ஆகும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். அதன் பிறகு சில நிமிடம் ஆறவிடுங்கள்.

செய் முறை :
இப்போது மாவினை ஒரு உருண்டை அளவு எடுத்து அதனை சப்பாத்தி போல் சிறிய அளவில் தேய்க்கவும்.
இதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்க்கவும். ஒட்டாமலிருக்க நெய்யை தடவிக் கொள்ளுங்கள்.

செய் முறை :
புதிதாக செய்பவர்களுக்கு கைகளால் செய்ய வரவில்லையென்றால், சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்.

செய் முறை :
நாசூக்காகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும். இல்லையெனில் பூரணம் வெளியே வந்துவிடும். பின்னர் தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் நெய்யில் சுட்டு எடுக்கவும்.



Click it and Unblock the Notifications