Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?
நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம்.
தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம்.
இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம்.

செய் முறை :
முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசையுங்கள்.

செய் முறை :
பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக அடித்து பிசைந்து, மாவை ஒரு பக்கம் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

செய்முறை :
பின்பு கொதிக்கும் நீரில் வெல்லம் கலந்து கரையும் வரையில் ஒரு கொதி விடுங்கள்.

செய்முறை :
கல், மண் களைய அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்ல நீரை ஊற்றி கெட்டியாகும் பதம் வரை கொதிக்க விடுங்கள்.

செய்முறை :
லேசாக கெட்டிபதத்தில் வரும்போது தேங்காய் துறுவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
ஒன்றாக சேர்ந்து பூரணம் ஆகும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். அதன் பிறகு சில நிமிடம் ஆறவிடுங்கள்.

செய் முறை :
இப்போது மாவினை ஒரு உருண்டை அளவு எடுத்து அதனை சப்பாத்தி போல் சிறிய அளவில் தேய்க்கவும்.
இதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்க்கவும். ஒட்டாமலிருக்க நெய்யை தடவிக் கொள்ளுங்கள்.

செய் முறை :
புதிதாக செய்பவர்களுக்கு கைகளால் செய்ய வரவில்லையென்றால், சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்.

செய் முறை :
நாசூக்காகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும். இல்லையெனில் பூரணம் வெளியே வந்துவிடும். பின்னர் தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் நெய்யில் சுட்டு எடுக்கவும்.



Click it and Unblock the Notifications











