Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: லட்டு
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். விநாயகருக்கு பிடித்த பலகாரங்களில் ஒன்று தான் லட்டு. சிலருக்கு அந்த லட்டு எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வீட்டிலேயே ஈஸியாக எப்படி லட்டு செய்வதென்று கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதன்படி செய்தால், நிச்சயம் சுவையான லட்டு கிடைக்கும். சரி, இப்போது அந்த லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை பொடி - 1/2 கப்
நெய் - 1/4 கப் + 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1 கையளவு
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கடலை மாவை சல்லடையில் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 1/4 கப் நெய் ஊற்றி சூடேற்றி, பின் அதில் சலித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து, 6-7 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.
பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்து, அதில் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து, மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கிளறி, மற்றொரு பௌலில் மாற்ற வேண்டும்.
அடுத்து கையில் சிறிது நெய் தடவி, கடலை மாவு கலவையை கையால் பிசைய வேண்டும். இறுதியில் அதனை லட்டு போன்று பிடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications