Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கேரட் அல்வா
நவம்பர் மாதம் கேரட் சீசன் என்பதால் கேரட்டை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிட முடியுமோ, அப்படியெல்லாம் சமைத்து சாப்பிடுங்கள். அல்வா பிடிக்கும் என்றால் அதனை அல்வா செய்து சாப்பிடுங்கள். அதிலும் கோயா கொண்டு செய்யப்படும் அல்வாவை செய்து சாப்பிடுங்கள். இது இன்னும் சூப்பராக இருக்கும்.
இப்போது கோயா கொண்டு எப்படி கேரட் அல்வா செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கிலோ (துருவியது)
பால் - 2 லிட்டர்
கோயா - 150 கிராம்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க...
முந்திரி - 5-6
பாதாம் - 5-6
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
பாலானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, 40-45 நிமிடம் பாலானது கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பால் கெட்டியானதும் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, கேரட் பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கேரட்டை வேக வைக்க வேண்டும்.
இதற்கு குறைந்தது 40 நிமிடமாவது ஆகும். பின் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை போட்டு 10-15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு தீயை குறைவில் வைத்து, அதில் கோயா மற்றும் சர்க்கரை சேர்த்து 15- 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
சர்க்கரையானது முற்றிலும் கரைந்த பின்பு, அதனை இறக்கி, அதன் மேல் முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் பொடி தூவி அலங்கரித்தால், சுவையான கேரட் அல்வா ரெடி!!!



Click it and Unblock the Notifications