Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
பொங்கலுக்கு வாங்குன கரும்பு இன்னும் இருந்தா.. ஈவ்னிங் இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Sugarcane Wheat Flour Kozhukattai Recipe In Tamil: பொங்கலுக்கு வாங்கிய கரும்பு இன்னும் உங்கள் வீட்டில் உள்ளதா? அப்படியானால் அந்த கரும்பை வீணக்கடிக்காமல் அதைக் கொண்டு அருமையான சுவையில் ஸ்நாக்ஸை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசியுடன் வரும் போது, அவர்களின் பசியைப் போக்கும் வகையிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு கரும்புடன், கோதுமை மாவை சேர்த்து கொழுக்கட்டை செய்யுங்கள். இது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு கரும்புச்சாறு கோதுமை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரும்புச்சத்து கோதுமை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கரும்பு - 3 (3/4 அடி நீளமுள்ள துண்டு)
* தண்ணீர் - 300 மிலி
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1/4 கப்
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கரும்பின் மேல் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட கரும்பை மிக்சர் ஜாரில்
போட்டு, முதலில் ஒருமுறை அரைக்க வேண்டும். அதன் பின் அதில் 300 மிலி
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை மாவை சேர்த்து 2
நிமிடம் வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு
மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து
கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கரும்பு சாற்றினை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு கையில் நெய்யை தடவி, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி,
பிடிக்கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைக்க
வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதனுள் இட்லி தட்டை வைத்து மூடி, 10
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கரும்புச்சாறு கோதுமை
கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications









