ராம்நாடு நன்னாரி பால் சர்பத்

By Maha

கொளுத்தும் கோடையில் பலரும் நன்கு குளிர்ச்சியாக ஜூஸ் குடிக்க விரும்புவோம். ஆனால் கார்பனேட்டட் பானங்களை குடித்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும் என்று பலருக்கும் தெரிந்த ஒன்றாதலால், பலரும் அதனை தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அருமையான ஒரு நன்னாரி பால் சர்பத் ரெசிபியைக் கொடுத்துள்ளது.

இந்த நன்னாரி பால் சர்பத் ராம்நாடு பகுதியில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ராம்நாடு நன்னாரி பால் சர்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Ramnad Nannari Milk Sarbath

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்
ஊற வைத்த பாதாம் பிசின் - 2 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை:

முதலில் இரவில் படுக்கும் போது, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் ப்ரௌன் நிறத்தில் ஏதேனும் இருந்தால், அதனை நீக்கிவிட்டு போட வேண்டும்.

மறுநாள் ஒரு டம்ளரை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நன்னாரி சிரப் ஊற்றி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பால் ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிட்டால், நன்னாரி பால் சர்பத் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Story first published: Friday, April 10, 2015, 17:33 [IST]
Desktop Bottom Promotion