Just In
- 41 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 3 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மசாலா சீயம்
மாலையில் சூடாகவும், காரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், டீ அல்லது காபி குடிக்கும் போது, மசாலா சீயம் செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற அருமையான ஸ்நாக்ஸ்.
மேலும் இந்த மசாலா சீயம் ரெசிபியானது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா சீயம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
-
1/2
கப்
உளுத்தம்
பருப்பு
-
1/2
கப்
பெரிய
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
துருவிய
தேங்காய்
-
2
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
கடுகு
-
3/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
பச்சை
மிளகாய்
-
2
(பொடியாக
நறுக்கியது)
செய்முறை:
முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா சீயம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions