Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மொறுமொறுப்பான... இனிப்பு தட்டை
மாலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் ஏதேனும் செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால் இனிப்பு தட்டையை செய்து கொடுங்கள். இது மொறுமொறுவென்று இனிப்பாக இருப்பதுடன், பெரியவர்கள் சாப்பிடும் வண்ணமும் இருக்கும். மேலும் இது ஒரு மாலையில் வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய சூப்பரான ஸ்நாக்ஸ்.
இங்கு அந்த இனிப்பு தட்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
ரவை - 1/4 கப்
நெய் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும்.
சர்க்கரையானது நன்கு கரைந்த பின்னர், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, நெய், எள்ளு சேர்த்து, வெதுவெதுப்பான நிலையில் சர்க்கரை பாகுவை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கெட்டியாக கிளறி விட வேண்டும்.
பின் அதனை 10-15 நிமிடம், மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து, கையால் லேசாக பிசைய வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, அதனை தட்டையாக தட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பு பிஸ்கட் ரெடி!!!



Click it and Unblock the Notifications