Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
மொறுமொறுப்பான... இனிப்பு தட்டை
மாலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் ஏதேனும் செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால் இனிப்பு தட்டையை செய்து கொடுங்கள். இது மொறுமொறுவென்று இனிப்பாக இருப்பதுடன், பெரியவர்கள் சாப்பிடும் வண்ணமும் இருக்கும். மேலும் இது ஒரு மாலையில் வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய சூப்பரான ஸ்நாக்ஸ்.
இங்கு அந்த இனிப்பு தட்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
ரவை - 1/4 கப்
நெய் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும்.
சர்க்கரையானது நன்கு கரைந்த பின்னர், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, நெய், எள்ளு சேர்த்து, வெதுவெதுப்பான நிலையில் சர்க்கரை பாகுவை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கெட்டியாக கிளறி விட வேண்டும்.
பின் அதனை 10-15 நிமிடம், மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து, கையால் லேசாக பிசைய வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, அதனை தட்டையாக தட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பு பிஸ்கட் ரெடி!!!



Click it and Unblock the Notifications