Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
பத்தே நிமிடத்தில் ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி?
தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் இன்று எள்ளு சட்னி செய்யுங்கள். இது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்று புலம்புவோர் அதிகம். இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி செய்து அலுத்துவிட்டதா?

அப்படியானால் இன்று எள்ளு சட்னி செய்யுங்கள். இது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். நீங்கள் வேலைக்கு செல்பவரானால், காலையில் இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு எள்ளு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பற்கள்
* இஞ்சி - 1 இன்ச்
* வரமிளகாய் - 5-7
* புளி - 1 சிறிய துண்டு
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு விதைகளைப் போட்டு 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், புளி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், ருசியான எள்ளு சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications
