Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ரோட்டுக்கடை தோசை சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து நீங்களும் ட்ரை பண்ணுங்க..
Rottukadai Dosa Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார் தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் தான் பிடிக்குமானால், ரோட்டுக்கடை தோசை சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும்.
ஏனெனில் இந்த சாம்பார் பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படுகிறது. மேலும் இதில் புளிப்புச் சுவைக்கு தக்காளியும், முக்கியமாக சாம்பாரின் சுவையை கூட்ட மஞ்சள் பூசணியும் சேர்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இது தான் இந்த சாம்பாரின் சுவைக்கு முக்கிய காரணம். இப்படியொரு சாம்பாரை வீட்டில் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக சாப்பிடாத குழந்தைகளுக்கும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த ரோட்டுக்கடை தோசை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தோசை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கேரட் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணி - 1/2 கப் (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை
மிளகாய், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், மஞ்சள் பூசணி, சாம்பார் தூள், மஞ்சள்
தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சாம்பாருக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும்
சாம்பாருடன் சேர்த்து கலந்து, 2 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ரோட்டுக் கடை தோசை சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications