சத்தான.. தினை உப்புமா

உங்களுக்கு தினை உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:

காலை வேளையில் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் காலை உணவு தான் ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவு. காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட காலை உணவின் போது நல்ல சத்தான உணவை உட்கொண்டால், அந்த சத்துக்களால் உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

Quinoa Upma Recipe In Tamil

காலை உணவுகளிலேயே மிகவும் சத்தானது உப்புமா. உங்களுக்கு ரவை உப்புமா பிடிக்காமல் போகலாம். ஆனால் சிறுதானிய வகையைச் சேர்ந்த தினையைக் கொண்டு உப்புமா செய்து பாருங்கள். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் இந்த தினை உப்புமாவுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளையும் சேர்த்து சமைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தினை உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தினை - 1/2 கப்

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் - 1

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* கறிவேப்பிலை - சிறிது

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* பாசிப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் - 5-6 (பொடியாக நறுக்கியது)

* பச்சை பட்டாணி - 1/2 கப்

* தண்ணீர் - 1 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் தினையை நீரில் 2-3 முறை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* கடுகு நன்கு வெடித்ததும், அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அதன் பின் அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் கழுவிய தினையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து ஒரு மூடியைக் கொண்டு வாணலியை மூடி வைத்து, தினையை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* நீரானது நன்கு வற்றி தினை நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, உப்புமாவின் மேல் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான மற்றும் சத்தான தினை உப்புமா தயார்.

Image Courtesy: vegrecipesofindia

[ of 5 - Users]
Story first published: Saturday, November 26, 2022, 7:00 [IST]
Desktop Bottom Promotion