Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பொங்கல் பண்டிகையன்று செய்யும் பொங்கல் குழம்பு பற்றி தெரியுமா?
சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிடுவார்கள்
Pongal 2023: பொங்கல் பண்டிகையன்று புதிய பச்சரிசியால் பொங்கலை செய்து, அதை சூரியனுக்கு படைத்து வணங்குவோம். இது தவிர சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு ஒரு புளிக்குழம்பு செய்து மதிய வேளையில் சாப்பிடுவார்கள். நீங்கள் இதுவரை இந்த மாதிரி பொங்கல் குழம்பை செய்து சாப்பிட்டதில்லை என்றால், இந்த பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த பொங்கல் குழம்பு செய்வது சுலபம். உங்களுக்கு பொங்கல் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொங்கல் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 3 கப் (மஞ்சள் பூசணி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய், மொச்சை காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாங்காய்)
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 2
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, அவற்றை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, அதை தொடர்ந்து மசாலா பொடிகளைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகள் வெந்துவிட்டதா என்பதை பார்க்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொங்கல் குழம்பு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
