Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பொங்கல் பண்டிகையன்று செய்யும் பொங்கல் குழம்பு பற்றி தெரியுமா?
சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிடுவார்கள்
Pongal 2023: பொங்கல் பண்டிகையன்று புதிய பச்சரிசியால் பொங்கலை செய்து, அதை சூரியனுக்கு படைத்து வணங்குவோம். இது தவிர சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு ஒரு புளிக்குழம்பு செய்து மதிய வேளையில் சாப்பிடுவார்கள். நீங்கள் இதுவரை இந்த மாதிரி பொங்கல் குழம்பை செய்து சாப்பிட்டதில்லை என்றால், இந்த பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த பொங்கல் குழம்பு செய்வது சுலபம். உங்களுக்கு பொங்கல் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொங்கல் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 3 கப் (மஞ்சள் பூசணி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய், மொச்சை காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாங்காய்)
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 2
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, அவற்றை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, அதை தொடர்ந்து மசாலா பொடிகளைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகள் வெந்துவிட்டதா என்பதை பார்க்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொங்கல் குழம்பு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









