Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
அன்னாசி பழத்தை வைச்சு இப்படி ஒரு சாதம் செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Pineapple Rice Recipe in Tamil: தினமும் என்ன சமைக்கலாம் என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரிசிகளுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். குழம்பு, பொரியல் என்று செய்வது எப்போதும் கடினமாக இருக்கும். அந்த சூழலில் கலவை சாதம் செய்வதுதான் அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். கலவை சாதம் என்று வரும்போது பொதுவாக தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவைதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.
பொதுவாக பழங்களை சாப்பிடத்தான் விரும்புவார்கள், ஆனால் அதை வைத்தும் சுவையான கலவை சாதம் செய்யலாம். அன்னாசி பழம் பொதுவாக அனைவருக்கும் பிடித்த பழமாக இருக்கும். ஆனால் அதை வைத்தே சுவையான கலவை சாதம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், அன்னாசி பழத்தை வைத்து சுவையான அன்னாசி பழ சாதம் செய்யலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள் :
- சமைத்த சாதம் - 1 கப்
- அன்னாசிப்பழம் -1 கப்
- வெங்காயம் - 1
- இஞ்சி - சிறு துண்டு
- பூண்டு - 4 பல்
- கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி அளவு
- புதினா - ஒரு கைப்பிடி
- மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- அத்துடன் துருவிய இஞ்சி, பூண்டு பற்களைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்று வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- அதில் 2 அல்லது 3 ஸ்பூன் நீரைத் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில் சில வினாடிகள் வதக்கவும்.
- பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.
- பின்னர் சாதத்தை அதில் போட்டு மிளகுத்தூள் தூவி தீயை அதிகமாக்கி, நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.
- இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறினால் சுவையான அன்னாசி சாதம் ரெடி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











