Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பூரி, சப்பாத்திக்கு டக்கரா இருக்கும் பட்டாணி மசாலா ரெசிபி...ட்ரை பண்ணி பாருங்க... ஹோட்டல் சுவையில் இருக்கும்!
Pattani Kurma Recipe in Tamil: இரவு வேளையில்
உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை, சப்பாத்தி அல்லது பூரிதான்
டின்னராக இருக்குமா? சப்பாத்தி, பூரிக்கு ஈஸியான கிரேவி என்றால்
அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு குருமாதான்.
ஏனெனில் உருளைக்கிழங்கு குருமா எப்போதும் செய்வதற்கு எளிதானது மற்றும்
சுவையானது.
சப்பாத்தி, பூரிக்கு ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும்
வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு கப் பட்டாணியும், பெரிய வெங்காயமும் இருந்தால், அட்டகாசமான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பட்டாணி குருமா சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு ஈஸியான பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய வெங்காயம், நீளமாக நறுக்கியது
- 2 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 கப் பச்சை பட்டாணி
- ½ கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் சீரகம்
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1 இலவங்கப்பட்டை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதன்பின் சீரகத்தை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நன்றாக குழையும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- இதற்கிடையில் மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த அரைத்த பேஸ்ட்டை கொஞ்சம் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- இதை கடாயில் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- நனறாக கொதி வந்ததும் மீதமுள்ள பச்சை பட்டாணியைச் சேர்த்து மூடி வைத்து 7-8 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பட்டாணி நன்கு வெந்ததும் உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்.
- இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி தூவி நன்கு கிளறினால் சுவையான பட்டாணி குருமா ரெடி!



Click it and Unblock the Notifications