Just In
- 57 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 4 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சிம்பிளான... பன்னீர் மசாலா
பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
இன்று நாம் காணவிருப்பது பன்னீர் மசாலா ரெசிபியைத் தான். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதோடு பன்னீரை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கால்சியம், புரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளன. இத்தகைய பன்னீர் அடிக்கடி உணவில் சேர்ப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
இப்போது பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லி தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் தக்காளி சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 7-8 நிமிடம் வேக வைக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் தயிர் சேர்த்து கிளறி, கிரேவி அதிகம் வேண்டுமானால் 1/2 கப் நீரையும் சேர்த்து, சுவைப்கேற்ப உப்பு தூவி கிளறிவிட்டு வேக வைக்கவும்.
* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் மசாலா ரெடி!