Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பன்னீர் இருந்தா.. சப்பாத்திக்கு 10 நிமிஷத்துல இந்த சைடு டிஷ் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Paneer Bhurji Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி பன்னீர் சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக அதே சமயம் சிம்பிளாக பன்னீரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் புர்ஜி மசாலாவை செய்யுங்கள்.
இப்படி பன்னீரை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இப்படி பன்னீரை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் செய்து கொடுக்க கேட்பார்கள். இந்த மசாலாவை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1
* மல்லித் தூள் - 1
* மஞ்சள் தூள் - 1/4
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* பன்னீர் - 250 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* வெண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலை மாவு சேர்த்து குறைவான தீயில் வைத்து, லேசாக நிறம்
மாற கிளறி விட்டு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாயை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து பன்னீரை கைகளால் உதிர்த்துவிட்டு, கொதித்துக்
கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, 1 கப் நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 4
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி மற்றும் நெய்/வெண்ணெய் சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











