Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
பாலக் கீரையை ஒருடைம் இப்படி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Palak Dal Recipe In Tamil: உங்கள் வீட்டில் கீரை செய்தாலே, யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை பாலக் கீரை வாங்கினால், அதைக் கொண்டு தால் செய்யுங்கள். இந்த பாலக் தால் சாதத்துடன் சாப்பிட மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு தால் செய்தால், கீரை விரும்பாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பாலக் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பாலக் கீரை - 2 கட்டு
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 1 1/2
கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாலக்கீரையை சுத்தம் செய்து, நீரில் கழுவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பெருங்காயத்
தூள் மற்றும் வரமிளகாயையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, மிளகாய் தூள் மற்றும் சாம்பார்
தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பாலக் கீரையை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறிவிட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து கிளறி, 2-3
நிமிடம் வேக வைத்து, இறக்கும் முன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பாலக் தால் தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications











