Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம் இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Paal Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு அவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பால் பணியாரத்தை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பால் பணியாரத்தை ஒரு கப் கோதுமை மாவைக் கொண்டு செய்யலாம். இந்த பால் பணியாரம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு பால் பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* சர்க்கரை பொடி - 1/4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பால் செய்வதற்கு...
* முந்திரி - 5
* ஏலக்காய் - 2
* நீர் - சிறிது
* காய்ச்சிய பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பொடித்த சர்க்கரை,
உப்பு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு
பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் பாலை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில்
முந்திரி, ஏலக்காயை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை ஊற்றி, பின் அதில்
சர்க்கரை மற்றும் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து, 1/2 லிட்டராக வரும்
வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைக்க
வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள மாவை எடுத்து, அதில் 1 சிட்டிகை சோடா உப்பை
சேர்த்து நன்கு கைகளால் பிசைய வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப்
போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின் பொரித்ததை பாலில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின்
பரிமாறினால், சுவையான பால் பணியாரம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications