Just In
- 3 min ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 56 min ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
- 1 hr ago 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
- 3 hrs ago 40 கோடிக்கு ஏலம் விடப்பட்ட தென்னிந்திய வம்சாவளியை சேர்ந்த பசு... இந்த பசுவிடம் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Don't Miss
- News "தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதே அதிமுக போட்ட பிச்சை!" சிவி சண்முகம் தடாலடி பேச்சு
- Movies Actor Kamal haasan: பிரித்விராஜ்கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
- Sports IPL - பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட தோனி.. ஸ்பின்னராக களமிறங்க போகிறாரா? என்னப்பா ஆச்சரியமா இருக்கு
- Automobiles டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
கிராமத்து மீன் குழம்பு
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மீன்
-
1/2
கிலோ
(உங்களுக்கு
பிடித்த
மீன்)
நல்லெண்ணெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
சின்ன
வெங்காயம்
-
5
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
1
(பொடியாக
நறுக்கியது)
கறிவேப்பிலை
-
சிறிது
புளி
-
1
சிறிய
எலுமிச்சை
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
அரைப்பதற்கு...
தேங்காய்
-
1
கப்
(துருவியது)
சின்ன
வெங்காயம்
-
10
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய்
-
8-10
மல்லி
-
2
டேபிள்
ஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi