Just In
- 31 min ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 3 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 5 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 6 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
Don't Miss
- News மன்னர் சார்லஸ் திடீரென உயிரிழப்பு? சர்வதேச ஊடகங்கள் சொல்லிடுச்சாம்.. உண்மையில் என்ன நடந்தது!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பண்டிகையன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய நினைத்தால் வான்கோழி பிரியாணி செய்து சுவையுங்கள். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வான்கோழி பிரியாணி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு வான்கோழி பிரியாணியை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கிறிஸ்துமஸ் அன்று செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
வான்கோழி
-
2-4
பெரிய
துண்டுகள்
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
2
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
2
(பொடியாக
நறுக்கியது)
நாட்டுத்
தக்காளி
-
1
(அரைத்தது)
புதினா
-
சிறிது
(பொடியாக
நறுக்கியது)
கொத்தமல்லி
-
சிறிது
(பொடியாக
நறுக்கியது)
எலுமிச்சை
-
1
(சாறு
எடுத்துக்
கொள்ளவும்)
கல்
உப்பு
-
சிறிது
மிளகாய்
தூள்
-
1/4
டீஸ்பூன்
தயிர்
-
1/4
கப்
பிரியாணிக்கு...
பாசுமதி
அரிசி
-
2
கப்
பச்சை
மிளகாய்
-
6
(நீளமாக
கீறியது)
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
புதினா
-
1
கைப்பிடி
அளவு
கொத்தமல்லி
-
1
கைப்பிடி
அளவு
நெய்
-
1
கப்
தாளிப்பதற்கு...
கிராம்பு
-
3
பட்டை
-
2
துண்டு
ஏலக்காய்
-
6
பிரியாணி
இலை
-
3
அன்னாசிப்பூ
-
2
உலர்ந்த
ரோஜாப்பூ
இதழ்
-
சிறிது
குங்குமப்பூ
-
சிறிது
செய்முறை:
முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கினால், வான்கோழி பிரியாணி ரெடி!!!