Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
காரமான... காளான் மசாலா

தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 7 பல்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டீபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் கிராம்பு போன்றைவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ளதை ஒரு பௌலில் போட்டு, பின்னர் தக்காளியை போட்டு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அதோடு துருவிய தேங்காய், தக்காளி கெட்சப் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து, கிளறி நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்க்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் சிறிது ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும். இல்லையெனில் கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்கலாம். இதனால் காளானும் நன்கு வெந்துவிடும்.
இப்போது காரமான காளான மசாலா ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications