Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சுவையான நெத்திலி மீன் கிரேவி

நெத்திலி மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கனிந்த தக்காளிப்பழம் - ஐந்து
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது – ஒரு கப்
மிளகாய் தூள் – 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 5 டீ ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
நெத்திலி சுத்தம் செய்யும் முறை
மீனின் தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விரலால் கீறி தலையோடு சேர்த்து வயிற்றில் உள்ள கழிவுகளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும். அனைத்து மீன்களையும் நன்கு சுத்தம் செய்த பின்னர் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும். பின்னர் மீன்களின் மீது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை, ஒரு டீ ஸ்பூன் உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதனால் தேவையற்ற மண், அழுக்கு இருந்தலும் வெளியேறிவிடும். மீன்களில் உப்பு பிடித்து சுவை கூடுதலாக இருக்கும்.
கிரேவி செய்முறை
அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும். சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் கனிந்த தக்காளிப் பழத்தை பிழிந்து விடவும். பின்னர் நன்றாக கிரேவியாகும் வரை வதக்கவேண்டும். இந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
புளி கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை மிதமாக வைத்து மீனை போடவும். 5 நிமிடம் கழித்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.
இந்த குழம்பிற்கு கடைசியில்தான் மீனைப் போடவும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவையெனில் சேர்க்கவும். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளிப் பழம் சேர்த்தால் போதுமானது.



Click it and Unblock the Notifications