Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரைக் கிலோ
ஆட்டுக்கறி - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு
இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
மிளகு - அரை டீ ஸ்பூன்
தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீ ஸ்பூன்
மஞ்சத்தூள் - ஒரு டீ ஸ்பூன்
கரம் மசாலா- அரை டீ ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ்பழம் : கால் கப்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா- ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு- ஒரு பழம்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்-தலா நான்கு
மராட்டி மொக்கு-இரண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
புலாவ் செய்முறை:
பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைக்கவும்.
ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுகவும். அதில் இஞ்சி பூண்டு விழுதில் பாதியளவு மற்றும் மிளகு, சிறிது உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் 5 வில் விட்டு வேகவைக்கவும். விசில் இறங்கிய உடன் மட்டன் துண்டுகளை தனியே எடுத்துவைக்கவும்.
குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா உள்ளிட்ட மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும். பின்பு அதில் மட்டன் வேகவைத்த தண்ணீர் உடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றேகால் கப் வீதம் தண்ணீரை அளந்து ஊற்றவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரியை கொட்டி குக்கரை மூடவும். விசில் போடவேண்டாம். ஆவி வரும் போது விசில் போட்டு அடுப்பை மிதமாக எரிய விடவும். சரியாக 10 நிமிடத்தில் அடுப்பை நிறுத்தி விடலாம். நன்றாக புலாவ் பொல பொலவென சூப்பராக வெந்திருக்கும். குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாற்றை மேலாக தெளிக்கவும்.
கடைசியில் முந்திரி, கிஸ்மிஸ்பழத்தை நெய்யில் பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications