மட்டன் கீமா புலாவ்

By Maha

Mutton Keema Pulav
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். ஆகவே அவ்வாறு ருசியாக, காரசாரமாக, கொஞ்சம் பிரியாணி போன்று, மட்டன் கொத்துக்கறியை வைத்து செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மட்டன் கீமா புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 250 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
முந்திரி - 1/4 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* முதலில் கொத்துக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அதனுடன் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி, மிளகுத் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அதோடு சுத்தம் செய்த கீமாவையும் சேர்த்து வதக்கவும்.

* பின்னர் அதில் வேண்டிய உப்பு சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, சிறிது நேரம் கறியை வேக விடவும்.

* பின் மூடியைத் திறந்து, பாசுமதி அரிசியை கழுவி, அதில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

* இப்போது சுவையான மட்டன் கீமா புலாவ் ரெடி!!! இதற்கு மட்டன் கிரேவியை சைடு டிஷ்-ஆக தொட்டு சாப்பிடலாம்.

Desktop Bottom Promotion