Latest Updates
-
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நிப்பட்டு ரெசிபி : ருசியான தட்டுவடை ரெசிபி வீட்டில் எளிதாக செய்யும் முறை!!
நிப்பட்டு தென்னிந்திய மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ் ஆகும். இதை அவர்கள் பண்டிகைகளின் போது செய்து சுவைப்பார்கள். அதிலும் தீபாவளி அன்றைக்கு செய்யும் முக்கிய ரெசிபியாக தட்டை உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தட்டை மிகவும் புகழ் பெற்று எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் செய்து மகிழ்வர். ஆந்திர மாநிலத்தில் இந்த நிப்பட்டை செக்கலு என்று கூறிகின்றனர்.
எல்லா திருமண மறுவீட்டு பலகாரங்களிலும் இந்த தட்டையை செய்து மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நிப்பட்டு காரசாரமான மசாலா பொருட்களுடன் அரிசி மாவை வைத்து எண்ணெய்யில் பொரித்து செய்யப்படும் ரெசிபி ஆகும். இது பதப்படாமல் இருக்க காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்வது நல்லது. மாதக் கணக்கில் கூட கெடாமல் அப்படியே இருக்கும். எப்பொழுது எல்லாம் வேணுமோ அப்பொழுது நாமும் விரும்பி சாப்பிடலாம்.
இந்த நிப்பட்டை வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
நிப்பட்டு வீடியோ ரெசிபி

Recipe By: காவ்யா ஸ்ரீ
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 12-14 தட்டைகள்
-
உடைத்த பொரிகடலை - 1/2 கப்
நிலக்கடலை - 1/2 கப்
அரிசி மாவு - 3/4 பங்கு பெளல்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 11/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு +தடவுவதற்கு
தண்ணீர் - 11/2 கப்
-
- 1/2 கப் உடைத்த பொரிகடலையை மிக்ஸி சாரில் எடுத்து கொள்ளவும்
- அதனுடன் 1/2 கப் நிலக்கடலையை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
- அரிசி மாவை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
- அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் 1டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்க்க வேண்டும்
- அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- பிறகு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- இந்த மாவு கலவையுடன் அரைத்த பொரிகடலை கலவையையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- அடுப்பில் ஒரு சின்ன கடாயை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்
- எண்ணெய்யை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
- சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக நடுத்தரமான மென்மை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- ஒரு பிளாஸ்டிக் சீட்டை எடுத்து அதன் மேல் எண்ணெய்யை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்
- பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து பிளாஸ்டிக் சீட்டில் வைத்து நன்றாக வட்ட வடிவில் தட்டையாக தட்டிக் கொள்ளவும்
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்
- தட்டிய வட்ட வடிவ மாவை கவனமாக மெதுவாக பிளாஸ்டிக் சீட்டிலிருந்து எடுத்து எண்ணெயில் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
- ஒரு நிமிடம் பொரிய வைத்து அப்படியே திருப்பி போட்டு மறுபக்கம் பொரிக்க வேண்டும்
- பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்
- பிறகு எண்ணெய்யை நன்றாக வடிகட்டி விட்டு கடாயில் இருந்து எடுத்து மிதமான சூட்டில் பரிமாறவும்
- 1. உங்களுக்கு நிலக்கடலை அலற்சி என்றால் அதற்கு பதிலாக பாதாம் பருப்பை பயன்படுத்தி கொள்ளலாம்
- 2. மாவின் பதம் அரிசி ரொட்டி (அஹி ரொட்டி) பதத்தில் இருக்க வேண்டும்.
- பரிமாறும் அளவு - 1 தட்டை
- கலோரிகள் - 70 கலோரிகள்
- புரோட்டீன் - 2 கிராம்
- கார்போஹைட்ரேட் - 8 கிராம்
- சர்க்கரை - 3 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் : நிப்பட்டு செய்வது எப்படி
1. 1/2 கப் உடைத்த பொரிகடலையை மிக்ஸி சாரில் எடுத்து கொள்ளவும்
2. அதனுடன் 1/2 கப் நிலக்கடலையை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
3. அரிசி மாவை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
4. அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் 1டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்க்க வேண்டும்
5. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
6. பிறகு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
7. இந்த மாவு கலவையுடன் அரைத்த பொரிகடலை கலவையையும் நன்றாக கலந்து கொள்ளவும்
8. அடுப்பில் ஒரு சின்ன கடாயை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்
9. எண்ணெய்யை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
10. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்
11. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக நடுத்தரமான மென்மை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
12. ஒரு பிளாஸ்டிக் சீட்டை எடுத்து அதன் மேல் எண்ணெய்யை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்
13. பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து பிளாஸ்டிக் சீட்டில் வைத்து நன்றாக வட்ட வடிவில் தட்டையாக தட்டிக் கொள்ளவும்
14. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த வேண்டும்
15. தட்டிய வட்ட வடிவ மாவை கவனமாக மெதுவாக பிளாஸ்டிக் சீட்டிலிருந்து எடுத்து எண்ணெயில் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
16. ஒரு நிமிடம் பொரிய வைத்து அப்படியே திருப்பி போட்டு மறுபக்கம் பொரிக்க வேண்டும்
17. பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்
18. பிறகு எண்ணெய்யை நன்றாக வடிகட்டி விட்டு கடாயில் இருந்து எடுத்து மிதமான சூட்டில் பரிமாறவும்



Click it and Unblock the Notifications



























