Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Mother's Day 2023: அன்னையர் தின ஸ்பெஷல் - கேரட் தேங்காய் பால் அல்வா
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த நினைக்கிறீர்களா?
ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் இதுவரை வீட்டில் சமையலறை பக்கமே சென்றதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சுவையான அல்வாவை உங்கள் கையால் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரட் தேங்காய் பால் அல்வாவை செய்து கொடுங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது வேகமாக செய்யக்கூடியது. உங்களுக்கு கேரட் தேங்காய் பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரட் தேங்காய் பால் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 கப் (துருவியது)
* தேங்காய் பால் - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கேரட்டை கழுவி , தோல் நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பாதமை சேர்த்து வறுத்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக குறைந்தது
5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் பாலை சேர்த்து, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, கேரட்டை நன்கு வேக வைக்க வேண்டும். தேங்காய்
பால் முழுவதும் வற்றுவதற்கு 10 நிமிடம் ஆகும். எனவே 10-15 நிமிடம்
நன்கு கேரட்டை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி,
மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளற வேண்டும்.
* அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, அதில்
வறுத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து கிளறினால், சுவையான கேரட் தேங்காய்
பால் அல்வா தயார்.
Image Courtesy: cooking4allseasons



Click it and Unblock the Notifications