Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Mother's Day 2023: அன்னையர் தின ஸ்பெஷல் - கேரட் தேங்காய் பால் அல்வா
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த நினைக்கிறீர்களா?
ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் இதுவரை வீட்டில் சமையலறை பக்கமே சென்றதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சுவையான அல்வாவை உங்கள் கையால் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரட் தேங்காய் பால் அல்வாவை செய்து கொடுங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது வேகமாக செய்யக்கூடியது. உங்களுக்கு கேரட் தேங்காய் பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரட் தேங்காய் பால் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 கப் (துருவியது)
* தேங்காய் பால் - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கேரட்டை கழுவி , தோல் நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பாதமை சேர்த்து வறுத்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக குறைந்தது
5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் பாலை சேர்த்து, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, கேரட்டை நன்கு வேக வைக்க வேண்டும். தேங்காய்
பால் முழுவதும் வற்றுவதற்கு 10 நிமிடம் ஆகும். எனவே 10-15 நிமிடம்
நன்கு கேரட்டை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி,
மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளற வேண்டும்.
* அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, அதில்
வறுத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து கிளறினால், சுவையான கேரட் தேங்காய்
பால் அல்வா தயார்.
Image Courtesy: cooking4allseasons



Click it and Unblock the Notifications








