Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
புதினா சட்னி அரைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து அரைங்க.. சட்னி சும்மா அள்ளும்...
Pudina Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு அடிக்கடி புதினா செய்வீர்களா? தற்போது கொளுத்தும் கோடையில் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் புதினா உடலின் குளிர்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.
ஆனால் நீங்கள் செய்யும் புதினா சட்னி அவ்வளவு ருசியாக இருக்காதா? அப்படியானால் அடுத்தமுறை புதினா சட்னி சுவையாக இருக்க வேண்டுமானால், அத்துடன் 2 பொருட்களை சேர்த்து அரையுங்கள். அது தான் சீரகம் மற்றும் பூண்டு. இந்த பொருட்களை சேர்த்து அரைக்கும் போது, சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு புதினா கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பச்சை மிளகாய் - 4
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள்
மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து,
பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து சுருங்க
வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், புளியை
சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த எள்ளு, கடலைப் பருப்பு மற்றும்
வரமிளகாயை மட்டும் சேர்த்து, பொடித்து, தனியாக ஒரு கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் புளி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
அத்துடன் புதினா, கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
சீரகம் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் சேர்த்து தாளித்து, கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான புதினா கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications