Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நைட் மீந்து போன இட்லி இருந்தா.. காலையில் இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்..
Masala Idli Recipe In Tamil: உங்கள் வீட்டில் நேற்று இரவு மீந்து போன இட்லி உள்ளதா? அப்படியானால் அந்த இட்லியை தூக்கிப் போடாமல் அதைக் கொண்டு சுவையான காலை உணவை செய்யுங்கள். பொதுவாக இட்லி மீந்து போனால் உப்புமா செய்வது தான் வழக்கம்.
ஆனால் இன்று மீந்து போன இட்லியைக் கொண்டு மசாலா இட்லியை செய்யுங்கள். இந்த மசாலா இட்லி மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மசாலா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன இட்லியைக் கொண்டு செய்யக்கூடிய மசாலா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன இட்லி - 6
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப்
* குடைமிளகாய் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* தக்காளி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இட்லிகளை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கி, மேலே
உப்பு தூவி, வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள்
வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அடுத்து அதில் 2 டேபிள்
ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள்
தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒன்று
சேரும் வரை கிளறி இறக்கி மேலே எலுமிசசை சாறு மற்றும் கொத்தமல்லியை
தூவினால், சுவையான மசாலா இட்லி ரெடி...
Image Courtesy: spiceupthecurry



Click it and Unblock the Notifications











