Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Masala Bun Dosa With Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் எப்படி டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் டிபன் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் மசாலா பன் தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு உளுந்து சட்னி அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். இந்த காம்போவை காலை வேளையில் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவா - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
பன் தோசைக்கு...
* கோதுமை மாவு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* சின்ன தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள்- 1/4
* கரம் மசாலா - 1/4
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
மேலே தூவுவதற்கு...
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 3
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு,
அத்துடன் ரவை மூழ்கும் அளவில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மூடி
வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்
பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வரமிளகாயை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து முதலில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, ஜாரில் தேவையான அளவு
நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கலந்தால், உளுந்து சட்னி
தயார்.
* அடுத்து ஊற வைத்த ரவையை நன்கு மசித்து விட வேண்டும். பின் அதில் 1/4
கப் கோதுமை மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கேரட், உருளைக்கிழங்கு, பொடியாக
நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப சோடா
மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து
ஊற்றி, மேலே வெங்காய கலவையை பரப்பி, மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின் திருப்பி போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், மசாலா
பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications