Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம்
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Masala Bun Dosa With Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் எப்படி டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் டிபன் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் மசாலா பன் தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு உளுந்து சட்னி அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். இந்த காம்போவை காலை வேளையில் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவா - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
பன் தோசைக்கு...
* கோதுமை மாவு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* சின்ன தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள்- 1/4
* கரம் மசாலா - 1/4
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
மேலே தூவுவதற்கு...
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 3
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு,
அத்துடன் ரவை மூழ்கும் அளவில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மூடி
வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்
பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வரமிளகாயை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து முதலில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, ஜாரில் தேவையான அளவு
நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கலந்தால், உளுந்து சட்னி
தயார்.
* அடுத்து ஊற வைத்த ரவையை நன்கு மசித்து விட வேண்டும். பின் அதில் 1/4
கப் கோதுமை மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கேரட், உருளைக்கிழங்கு, பொடியாக
நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப சோடா
மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து
ஊற்றி, மேலே வெங்காய கலவையை பரப்பி, மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின் திருப்பி போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், மசாலா
பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications











