Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
மரவள்ளிக் கிழங்கை ஈவ்னிங் டைம்-ல இப்படி செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Maravalli Kizhangu Vadai Recipe In Tamil: தற்போது மரவள்ளிக்கிழங்கு சீசன். உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடமாட்றாங்களா? அப்படிப்பட்டவர்களை மரவள்ளிக்கிழங்கு சாப்பிட வைக்க வேண்டுமா?
மரவள்ளிக்கிழங்கு கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் மரவள்ளிக்கிழங்கு வடை. இந்த வடையை மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது கொடுத்தால், வயிறும் நிறையும், விரும்பியும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த வடையின் சுவை மற்ற வடையை விட தனித்துவமான சுவையை கொண்டிருக்கும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 3/4 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சரிசி - 2 ஸ்பூன் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
* மரவள்ளிக்கிழங்கு - 2 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். 3 மணிநேரம் கழித்து கடலைப் பருப்பை நன்கு 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப் பருப்பில் ஒரு கைப்பிடியை
எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளதை போட்டு, அத்துடன் வரமிளகாய், சீரகம்,
இஞ்சி மற்றும் ஊற வைத்த பச்சரிசி ஆகியவற்றை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும். பின் துருவிய மரவள்ளிக்கிழங்கில் உள்ள அதிகப்படியான பாலை
பிழிந்து எடுத்துவிட வேண்டும்.
* அதன் பின் பிழிந்த மரவள்ளிக்கிழங்கை ஜாரில் போட்டு, அத்துடன் 1
கைப்பிடி கடலைப்பருப்பை சேர்த்து ஒருமுறை அரைத்து எடுத்து, ஏற்கனவே
அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வடை மாத
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி
தட்டையாக தட்டி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், மரவள்ளிக்கிழங்கு வடை தயார்.



Click it and Unblock the Notifications











