Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மரவள்ளிக்கிழங்கும், இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
Maravalli Kizhangu Bonda Recipe In Tamil: மரவள்ளிக்கிழங்கு சீசன் தொடங்கிவிட்டது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டபவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் மரவள்ளிக்கிழங்கை வெறுமனே வேக வைத்து சாப்பிட கொடுக்காமல், அவற்றைக் கொண்டு வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் மரவள்ளிக்கிழங்கு கொண்டு ஸ்வீட் போண்டா செய்து கொடுங்கள். இப்படி செய்யும் போது பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* தேங்காய் - 1/2 மூடி
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கை குக்கரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி,
குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கை எடுத்து குளிர வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து,
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அத்துடன் 1/4 கப்
அரிசி மாவை சேர்த்து பிசைந்து மேல் மாவை தயார் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் மரவள்ளிக்கிழங்கு கலவையை சிறிது எடுத்து உருட்டி ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும்
உருண்டைகளாக்கி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, இட்லி
மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், மரவள்ளிக்கிழங்கு போண்டா தயார்.
குறிப்பு:
ஒருவேளை உங்களுக்கு எண்ணெயில் பொரித்து சாப்பிட பிடிக்காவிட்டால், பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் மாவில் பிரட்டி குழிகளில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











