Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
வெண் பொங்கல் செய்யும் போது இந்த 1 பொருளை சேர்த்து இந்த பக்குவத்துல செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Malli Pongal Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று செய்து போரடித்துவிட்டதா? சரி, பொங்கல் செய்யலாம் என்று பார்த்தால், வீட்டில் உள்ளோர் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு பொங்கலை வேறு மாதிரியான சுவையில் செய்து கொடுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யுமாறு வெண் பொங்கலை செய்யாமல், கொத்தமல்லி சேர்த்து பொங்கல் செய்யுங்கள். இதனால் சுவையும் மணமும் வேற லெவலில் அருமையாக இருக்கும். இந்த மாதிரி வெண் பொங்கலை செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும். இப்படி கொத்தமல்லி சேர்த்து செய்வதால், இந்த பொங்கலுக்கு மல்லி பொங்கல் என்று பெயர். எனவே அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால் இந்த மல்லி பொங்கலை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
உங்களுக்கு மல்லி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 1/2 கப்
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* முந்திரி - 10
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கையளவு (வெறும் இலைகள் மட்டும்)
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசி மற்றும்
பாசிப்பருப்பை எடுத்து நீரில் 2-3 முறை கழுவி விட்டு, நீரை ஊற்றி 20
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பில் உள்ள நீரை
வடிகட்டிவிட்டு, அரிசி பருப்பை குக்கரில் போட்டு, அத்துடன் 3 1/2 கப்
நீரை ஊற்றி, அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி பருப்பை நன்கு
மசித்து விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மல்லி விழுதை சேர்த்து கிளறி, குறைவான
தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு கிளறி விட்டு
இறக்கினால், சுவையான மல்லி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications






