Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
மீந்து போன சாதம் இருந்தா.. அத தூக்கி எறியாம.. இந்த மாதிரி பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Leftover Rice Paniyaram Recipe In Tamil: உங்கள் வீட்டில் நேற்று சமைத்த சாதம் நிறைய உள்ளதா? அந்த சாதத்தை தூக்கி எறிய விருப்பம் இல்லையா? அதே சமயம் அதை கஞ்சியாகவும் குடிக்க விருப்பம் இல்லையா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு வேறு ஏதாவது செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரம் பிடிக்குமானால், அந்த பணியாரத்தை செய்யுங்கள். என்னது, மீந்து போன சாதத்தில் பணியாரமா என்று கேட்கலாம். உண்மையில் மீந்து போன சாதம் கொண்டு பணியாரம் செய்தால், அந்த பணியாரம் இன்னும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி பணியாரம் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மீந்து போன சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு, 1/4 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையான அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில், அரைத்த சாதத்தை எடுத்து, அத்துடன் ரவையை
சேர்த்து 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, 10 நிமிடம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
மாவுடன் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்
குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மீந்து போன சாத
பணியாரம் தயார்.
Image Courtesy: from our nest



Click it and Unblock the Notifications









