Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
எப்பவும் இட்லி, தோசை-ன்னு செஞ்சு போரடிக்குதா? அப்ப கொங்கு ஸ்பெஷல் உப்பு மிளகு ரொட்டியை ட்ரை பண்ணி பாருங்க..
Kongu Special Uppu Rotti Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஈஸியான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் விடுமுறை நாளில் தான் இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்து சாப்பிட முடியும்.
அப்படியானால் கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை செய்யுங்கள். இந்த ரொட்டி காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை
எடுத்து நீரில் 2-3 முறை அலசி விட்டு, பின் நீரை ஊற்றி மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த அரிசி பருப்பை நன்கு கழுவி, பின் அதை
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து, அதை ஓரளவு
மெல்லியதாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான உப்பு ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications




