Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
எப்பவும் இட்லி, தோசை-ன்னு செஞ்சு போரடிக்குதா? அப்ப கொங்கு ஸ்பெஷல் உப்பு மிளகு ரொட்டியை ட்ரை பண்ணி பாருங்க..
Kongu Special Uppu Rotti Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஈஸியான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் விடுமுறை நாளில் தான் இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்து சாப்பிட முடியும்.
அப்படியானால் கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை செய்யுங்கள். இந்த ரொட்டி காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை
எடுத்து நீரில் 2-3 முறை அலசி விட்டு, பின் நீரை ஊற்றி மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த அரிசி பருப்பை நன்கு கழுவி, பின் அதை
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து, அதை ஓரளவு
மெல்லியதாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான உப்பு ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications