Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
கார்த்திகை தீப ஸ்பெஷல்: பருப்பு போளி ரெசிபி
கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் இறைவனுக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து, தீப வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ். பள்ளி முடிந்த பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு போளியை செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு பருப்பு போளி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெளிப்பகுதி செய்வதற்கு..
* மைதா - 1 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதல் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மேலே எண்ணெயை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆன பின்னர், கடலைப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு ஈரப்பசை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம் சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (மென்மையாக அரைத்துவிட வேண்டாம்)
* பின்னர் அந்த பருப்புடன், வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை சிறு எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவை உருட்டி வைத்துள்ள பருப்பு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மைதா உருண்டையை எடுத்து, தட்டையாக தேய்த்து, அதன் நடுவே ஒரு பருப்பு உருண்டையை வைத்து, மடிக்க வேண்டும்.
* பின் அதை அப்படியே போளி போன்று தட்டையாக தேய்க்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்தள்ள போளியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று தேய்த்து வைத்துள்ள போளிகளை வேக வைத்து எடுத்தால், சுவையான பருப்பு போளி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
