Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
கார்த்திகை தீப ஸ்பெஷல்: பருப்பு போளி ரெசிபி
கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் இறைவனுக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து, தீப வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத்தன்று பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பருப்பு போளி. இந்த பருப்பு போளி ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ். பள்ளி முடிந்த பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு போளியை செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு பருப்பு போளி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெளிப்பகுதி செய்வதற்கு..
* மைதா - 1 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதல் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மேலே எண்ணெயை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆன பின்னர், கடலைப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு ஈரப்பசை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம் சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (மென்மையாக அரைத்துவிட வேண்டாம்)
* பின்னர் அந்த பருப்புடன், வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை சிறு எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவை உருட்டி வைத்துள்ள பருப்பு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மைதா உருண்டையை எடுத்து, தட்டையாக தேய்த்து, அதன் நடுவே ஒரு பருப்பு உருண்டையை வைத்து, மடிக்க வேண்டும்.
* பின் அதை அப்படியே போளி போன்று தட்டையாக தேய்க்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்தள்ள போளியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று தேய்த்து வைத்துள்ள போளிகளை வேக வைத்து எடுத்தால், சுவையான பருப்பு போளி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









