Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
தினமும் வெறும் டீ போடாம.. ஒருடைம் இந்த கற்பூரவள்ளி மசாலா டீ போட்டு குடிங்க.. இதமா இருக்கும்...
Karpooravalli Masala Tea Recipe In Tamil: தற்போது ஆங்காங்கே மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் நன்கு சூடாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ஒரு மசாலா டீ குடித்தால் நன்றாக இருக்கும்.
பொதுவாக மசாலா டீ என்றால் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விடுவிக்க உதவும் கற்பூரவள்ளி கொண்டும் டீ போடலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இலைகளைக் கொண்டு போடப்படும் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்பூரவள்ளி இலைகள் - 8
* ஏலக்காய் - 2
* மிளகு - 10
* இஞ்சி - 2 துண்டு
* பால் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* டீத்தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2
டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை
பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால்,
சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











