Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தினமும் வெறும் டீ போடாம.. ஒருடைம் இந்த கற்பூரவள்ளி மசாலா டீ போட்டு குடிங்க.. இதமா இருக்கும்...
Karpooravalli Masala Tea Recipe In Tamil: தற்போது ஆங்காங்கே மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் நன்கு சூடாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ஒரு மசாலா டீ குடித்தால் நன்றாக இருக்கும்.
பொதுவாக மசாலா டீ என்றால் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விடுவிக்க உதவும் கற்பூரவள்ளி கொண்டும் டீ போடலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இலைகளைக் கொண்டு போடப்படும் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்பூரவள்ளி இலைகள் - 8
* ஏலக்காய் - 2
* மிளகு - 10
* இஞ்சி - 2 துண்டு
* பால் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* டீத்தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2
டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை
பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால்,
சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











