Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
தினமும் வெறும் டீ போடாம.. ஒருடைம் இந்த கற்பூரவள்ளி மசாலா டீ போட்டு குடிங்க.. இதமா இருக்கும்...
Karpooravalli Masala Tea Recipe In Tamil: தற்போது ஆங்காங்கே மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் நன்கு சூடாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ஒரு மசாலா டீ குடித்தால் நன்றாக இருக்கும்.
பொதுவாக மசாலா டீ என்றால் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விடுவிக்க உதவும் கற்பூரவள்ளி கொண்டும் டீ போடலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இலைகளைக் கொண்டு போடப்படும் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்பூரவள்ளி இலைகள் - 8
* ஏலக்காய் - 2
* மிளகு - 10
* இஞ்சி - 2 துண்டு
* பால் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* டீத்தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2
டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை
பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால்,
சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications