Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
காரைக்குடி தக்காளி சட்னி: இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் பிரதானமான காலை மற்றும் இரவு உணவு என்னவென்றால் அது இட்லி மற்றும் தோசைதான். சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன்களை செய்ய அதிக நேரம் தேவைப்படும். இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சட்னிதான். ஆனால் வழக்கமான சட்னிகளுக்குப் பதிலாக புதுப்புது சட்னிகளை முயற்சி செய்யும்போது வீட்டிலிருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக சாப்பிடுவார்கள்.
சட்னி வகைககளில் காரைக்குடி சட்னிகளுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. காரைக்குடி என்றாலே அது சுவையான உணவுகளுக்கு பெயர் போன ஊராகும். காரைக்குடி உணவுகளுக்கென்று தனி அடையாளமும், சிறப்பும் உண்டு. அந்த வகையில் காரைக்குடி தக்காளி சட்னி இட்லி, தோசை மற்றும் பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். நாட்டு தக்காளியை பயன்படுத்தி இந்த சட்னியை செய்யும்போது அதன் சுவை கூடுதலாக இருக்கும். இந்த சுவையான தக்காளி சட்னியை எப்படி டக்குனு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
பழுத்த நாட்டு தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 3
காஷ்மீர் மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் பாதி எண்ணெயை சூடாக்கவும்.
- அதன்பின் கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், புளி ஆகியவற்றை நன்கு
வதக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
3-4 நிமிடங்கள் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இந்த
கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள்
தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை நன்கு குளிர வைக்கவும்.
- வதக்கிய மிளகாய், பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை கொரகொரவென
அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெங்காயம், பூண்டு கலவையை சேர்த்து மீண்டும் சில நொடிகள்
அரைக்கவும்.
- இப்போது வதக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து அதில் தேவையான
தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது மீதமுள்ள எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும். எண்ணெயை சூடாக்கி
கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து
சட்னியில் ஊற்றவும்
- இப்போது சுவையான காரைக்குடி தக்காளி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை
மற்றும் பொங்கலுடன் சேர்த்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











