Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
பூரி மற்றும் தோசைக்கு சைடிஷ் செய்ய ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இந்த 10 நிமிஷ ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க...!
சிலருக்கு சமைக்க பிடிக்கும், சிலருக்கு நன்றாக ருசித்து சாப்பிட பிடிக்கும். நம்ம எல்லோருக்கும் அம்மா சமையல் தெரியும். ஆரோக்கியமான சுவையான உணவு அம்மாவின் அன்போடு நம்ம தட்டுக்கு வரும் போது அற்புதமாதான் இருக்கும். ஆனா, இப்போ கணவன், மனைவின்னு இரண்டு பேரும் வேலை வேலைனு சம்பாத்தியத்துக்காக ஓட வேண்டி இருக்கு. இந்த அவசர உலகத்துல சாப்பாடு அப்படிங்கறது நகரத்துல ஹோட்டல்ல கிடைக்க கூடிய ஒண்ணாதான் மாறிக்கிட்டு இருக்கு.

இதுக்கு காரணம் வீட்டில சமைக்க நேரம் இல்லாத காரணத்தாலதான் பெரும்பாலான மக்கள் ஹோட்டலை நோக்கி ஓடுறாங்க. அது ஆரோக்கியமானதா இல்லைனு தெரிஞ்சும், தொடர்ந்து அதையே செய்து உடல் ஆரோக்கியம் கெட்டுப்போன அப்புறம் வீட்ல சமைக்க ஆரம்பிப்பாங்க. பெரும்பாலும், நகரங்களுக்கு வர பசங்க வெளிய தான் சாப்பிடறாங்க. அவங்களுக்கு சமைக்கவும் தெரியாது.
பூரி மற்றும் தோசை போன்றவை எளிதில் செய்யக்கூடிய டிபனாக இருக்கலாம், ஆனால் அதற்க்கு சைடிஷ் செய்வதே மிகவும் சவாலான ஒன்றாகும்.நேரம் இல்லாதவங்களுக்கும், சமைக்க தெரியாதவர்களும் கூட எளிமையாக சமைக்கக் கூடிய பாம்பே பூரி மசாலாவும், அவசர சட்டினியும் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
பாம்பே பூரி மசாலா:
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
கஸ்தூரி மேத்தி - ½ ஸ்பூன்
மிளகாய் தூள் - ½ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
மல்லி தூள் - ¼ ஸ்பூன்
கரம் மசாலா - ¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- குக்கரில் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் காரம் மசாலா சேர்க்கவும்.
- பின் அதனுடன் நன்றாக மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.சட்டுனு செய்ய கூடிய சுவையான பூரி மசால் ரெடி.
அவசர சட்னி:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
வரமிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
உளுந்தம் பருப்பு - தாளிக்க
கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, பூண்டு, மற்றும் வரமிளகாயுடன் தேவையான அளவு
உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மற்றும்
கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பின், அதில் சட்டினியை சேர்த்து லேசாக கொதிக்க வைத்தால், நம் எளிதான
மற்றும் சுவையான அவசர சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications

