Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த சண்டே இந்த மீன் குழம்பை ட்ரை பண்ணுங்கள்..!
காரமான சுறா பூண்டுக் குழம்பை இந்த சண்டே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.. இதில் புரதங்கள் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.. வாங்க இந்த குழம்பை எப்படி செய்வது என்று ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
1. சுறா மீன்
2. தக்காளி
3. வெந்தயம்
4. கடுகு
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பிலை
7. கொத்துமல்லி இலை
8. மிளகுத் தூள்
9. சின்ன வெங்காயம்
10. எண்ணெய்
11. மஞ்சள் தூள்
12. தனியாத் தூள்
13. மிளகாய்த் தூள்
14. சீரகத் தூள்
15. புளி
16. முழுப்பூண்டு
17. உப்பு

செய்முறை
1. முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு சுறா மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
3. இப்போது கழுவிய சுறாமீனை துண்டுகளாக நறுக்கவும்.
4. பூண்டை உரித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், தக்காளி ஆகிய இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
6. எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும். பின்னர் மேற்கண்டவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் பூண்டு, தக்காளி, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். மேல் வதக்கியவற்றுடன் சுறா மீன் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
8. மீன் துண்டுகள் அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
9. அதன் பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளிக் கரைசல் ஆகிய இவற்றையும் சேர்த்து ஊற்றி அத்துடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் படியாக கொதிக்கவிடவும்.
10. இப்போது காரசாரமான சுறா மீன் குழம்பு ரெடி..



Click it and Unblock the Notifications