Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த சண்டே இந்த மீன் குழம்பை ட்ரை பண்ணுங்கள்..!
காரமான சுறா பூண்டுக் குழம்பை இந்த சண்டே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.. இதில் புரதங்கள் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.. வாங்க இந்த குழம்பை எப்படி செய்வது என்று ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
1. சுறா மீன்
2. தக்காளி
3. வெந்தயம்
4. கடுகு
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பிலை
7. கொத்துமல்லி இலை
8. மிளகுத் தூள்
9. சின்ன வெங்காயம்
10. எண்ணெய்
11. மஞ்சள் தூள்
12. தனியாத் தூள்
13. மிளகாய்த் தூள்
14. சீரகத் தூள்
15. புளி
16. முழுப்பூண்டு
17. உப்பு

செய்முறை
1. முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு சுறா மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
3. இப்போது கழுவிய சுறாமீனை துண்டுகளாக நறுக்கவும்.
4. பூண்டை உரித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், தக்காளி ஆகிய இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
6. எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும். பின்னர் மேற்கண்டவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் பூண்டு, தக்காளி, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். மேல் வதக்கியவற்றுடன் சுறா மீன் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
8. மீன் துண்டுகள் அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
9. அதன் பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளிக் கரைசல் ஆகிய இவற்றையும் சேர்த்து ஊற்றி அத்துடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் படியாக கொதிக்கவிடவும்.
10. இப்போது காரசாரமான சுறா மீன் குழம்பு ரெடி..



Click it and Unblock the Notifications









