Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம்
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டே 30 நிமிடத்தில் தயாரிக்கலாம்.

உங்களுக்கு வீட்டில் எளிய முறையில் எப்படி பன்னீர் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வீட்டில் தயாரிக்கும் பன்னீர் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொழுப்புமிக்க பால் - 2 லிட்டர்
* தயிர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்கு திரிந்து நீர் முழுமையாக பிரிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்த, அதில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும் போது குளிர்ந்த நீரை ஊற்றி கையால் கிளறிவிட்டு வடிகட்டுங்கள்.
* பிறகு அந்த துணியை மூட்டை போட்டு நன்கு கட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றி, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 நிமிடம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலை திரிய வைப்பதற்கு தயிருக்கு பதிலாக, எலுமிச்சை சாறு அல்லது வினிகரைப் பயன்படுத்தலாம்.
* பாலை திரிய வைத்து வடிகட்டிய பின்னர், குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால் பன்னீரில் உள்ள புளிப்புத்தன்மை நீங்கும்.
* வேண்டுமானால், தயாரித்த பன்னீரை உதிர்த்துக் கொள்ளலாம் அல்லது விருப்பமான வடிவத்திலும் வெட்டிக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











