Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
மாலை நேர ஸ்நாக்ஸ்: மொறுமொறுப்பான... பச்சை பட்டாணி வடை
இதுவரை நீங்கள் கடலை பருப்பு கொண்டு தான் வடை செய்திருப்பீர்கள். ஆனால் பட்டாணியைக் கொண்டு செய்யும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இன்று மாலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்ந்த பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியால் அந்த பட்டாணியைக் கொண்டு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடை செய்து கொடுங்கள். ஆனால் அந்த பட்டாணியை குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பட்டாணி வடை மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதுவரை நீங்கள் கடலை பருப்பு கொண்டு தான் வடை செய்திருப்பீர்கள். ஆனால் பட்டாணியைக் கொண்டு செய்யும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பட்டாணி வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த பட்டாணி - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காய்ந்த பட்டாணியை சுடுநீரில் போட்டு மூடி வைத்து குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த பட்டாணியை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பொடியை அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் சிறிது சிறிதாக எடுத்து, தட்டையாக தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பட்டாணி வடை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications