Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இட்லி, தோசைக்கு இந்த இஞ்சி, பூண்டு கார சட்னியை செஞ்சு பாருங்க... எல்லாரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Ginger Garlic Chutney Recipe in Tamil: உணவின் சுவை அதற்கு நாம் சேர்த்து சாப்பிடும் சைடு டிஷ் பொறுத்து மாறும். பொதுவாகவே வீட்டில் நாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி, ஏன் கடலை சட்னி கூட செய்வோம். சில நேரத்தில் பூண்டு சட்னி செய்வோம். ஆனால் இது போல் வித்தியாசமான சுவையில் இஞ்சி பூண்டு சட்னி செய்து பாருங்கள். வாங்க இஞ்சி பூண்டு சட்னி எப்படி செய்வதுன்னு இங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 15
- இஞ்சி - சிறிதளவு (5 இன்ச் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- கருவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 2
- புளி - சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - தாளிக்க
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- புளியின் மேற்பகுதியில் இருக்கும் ஓடு மற்றும் குப்பையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து கிளறவும்.
- கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் கழுவி வைத்த புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான இஞ்சி பூண்டு சட்னி ரெடி!
- இது சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











