Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
5 நிமிடத்தில் பூண்டு சட்னி செய்வது எப்படி தெரியுமா?
உங்களுக்கு 5 நிமிடத்தில் பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக ஒரு சுவையான மற்றும் காரமான சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த பூண்டு சட்னி செய்வதற்கு 5 நிமிடம் தான் ஆகும். இந்த சட்னியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றது.

உங்களுக்கு 5 நிமிடத்தில் பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 20 பல்
* காஷ்மீரி மிளகாய் - 10
* புளி - 1 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கப் நீரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாயை போட்டு, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதில் உள்ள வரமிளகாயை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். (நீரை கீழே ஊற்றி விடாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.)
* பின் ஜாரில் பூண்டு மற்றும் புளி சேர்த்து, சிறிது மிளகாய் ஊற வைத்த நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து, மிளகாய் ஊற வைத்த நீர் இருந்தால், அந்நீரைக் கொண்டு ஜாரைக் கழுவி வாணலியில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* சட்னி கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து 10-12 நிமிடம் சட்னியில் இருந்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சட்னியானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கிளறி, 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
