Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
பல முன்னணி நடிகைகள் பயன்படுத்தும் ஆளி விதை பொடி ரெசிபி... எப்படி செய்யணும் தெரியுமா?
Flax Seed Powder Recipe: ஆளி விதைகள் உடலுக்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட் உடலில் பல நன்மைகளை தர வல்லது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைத்து கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவுகிறது. இது முடி கொட்டுவதை குறைத்து அடர்த்தியாக வளரவும் செய்கிறது. ஆனால் அவற்றை எப்படி சாப்பிடுவது எவ்வளவு சாப்பிடுவது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும்.
தினசரி ஒருவருக்கு 15 முதல் 20 கிராம் ஆளி விதை போதுமானதாக இருக்கும். சிலர் ஆரோக்கியம் என்றதும் சாப்பிட்டு விடுவார்கள். சிலர் கண்ணை மூடி கொண்டு கஷ்டப்பட்டு விழுங்குவார்கள். சிலர் ஆரோக்கியமாவது மண்ணாவது என ஒதுக்கி விடுவார்கள். அதற்கு காரணம் அதன் சுவை தான். அதை சுவையாக மாற்றி அதன் பலன்களை முழுவதும் பெற இப்படி ஆளி விதை பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள். பிரபல நடிகை கூட இதை பற்றி பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்:
- ஆளி விதை / பிளாக்ஸ் ஸீட் - 1 கப்
- வெள்ளை எள் - ¼ கப்
- வரமிளகாய் - 5
- காஷ்மீர் மிளகாய் - 5
- பூண்டு - 10 பல்
- கருவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி (சிறியது)
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து நன்றாக தட்டி வைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ எடுத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் ஆளி விதைகளை சேர்க்கவும்.
- ஆளி விதை சூடாகி வெடிக்க துவங்கும் போது மிதமான தீயில் நிறம் மாறும்
வரை வறுத்து ஆற விடவும்.
- பின் அதே வாணலியில் வெள்ளை எள்ளை சேர்த்து நன்றாக வறுத்து
ஆறவிடவும்.
- பின் சிறிதளவு எண்ணையை அதே வாணலியில் சேர்த்து சூடாக விடவும்.
- அதில் தட்டி வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற
விடவும்.
- அதே பாத்திரத்தில் தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து
கொள்ளவும்.
- பின் துருவியோ அல்லது நறுக்கியோ வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாகவும் வரை வறுத்து ஆற விடவும்.
- தேவைப்பட்டால் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் வரமிளகாய்,
காஸ்மீர் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் கருவேப்பிலை இலைகளை சேர்த்து ஈரப்பதம் இல்லாமல்
நொறுங்கும் பதத்திற்கு வறுக்கவும்.
- அதனுடன் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
- வறுத்து ஆற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான
அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான ஆளி விதை
பொடி ரெடி!
இந்த பொடியை ஈரமில்லாத ஏர் டைட் கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து
பிரிட்ஜில் வைத்து தினசரி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை சாதம், இட்லி, மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: தேங்காய் சேர்த்து இருப்பதால் முடிந்தவரை சீக்கிரம் உபயோகிக்கவும். நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த தேங்காயை தவிர்த்து மற்றவை பொருட்களை சேர்த்து கொள்ளவும்.



Click it and Unblock the Notifications











