Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
10 நிமிசத்தில் செய்யக்கூடிய புளி இல்லாத புளிக்குழம்பு ரெசிபி... சட்டுனு மதிய உணவுக்கு செஞ்சு பாருங்க...!
Easy Puli Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக சாம்பார், குருமா அல்லது புளிக்குழம்பு போன்றவைதான் வாரம் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு நாள்தான் இந்த 3 குழம்பையே செய்து கொண்டிருப்பது.
இதற்கு மாற்றாக வேறு சில குழம்பு வகைகளை வைக்கலாம். அதில் ஒன்றுதான் புளி இல்லாத புளிக்குழம்பு. இந்த குழம்பு சுவையில் வத்தக் குழம்பு போல இருக்கும்ம் ஆனால் இதில் நாம் புளி சேர்க்கப் போவதில்லை. சில நிமிடங்களில் செய்து விடக்கூடிய இந்த குழம்பை மதிய உணவிற்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் இந்த அட்டகாசமான குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
அரைக்க:
- சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 2
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/4 சிட்டிகை
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் சாம்பார் தூளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்கு வெந்ததும், கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நசுக்கிய பூண்டைப் போடவும், குழம்பு நன்கு கொதித்ததும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான புளிக்குழம்பு ரெடி.
- சாதத்துக்கு இந்த குழம்பு மிகவும் சூப்பராக இருக்கும். அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை வேற லெவலில் இருக்கும்.



Click it and Unblock the Notifications











