Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் அதற்கு செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அதற்காக பன்னீரைக் கொண்டு வெறும் கிரேவி, மசாலா செய்யாமல், சற்று வித்தியாசமாக புர்ஜி செய்து கொடுங்கள். அதுவும் தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செய்து கொடுங்கள்.
இந்த பன்னீர் புர்ஜி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, புல்காவுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் பன்னீர் புர்ஜியை மாலை வேளையில் குழந்தைகளுக்கு பசிக்கும் போதும் செய்து கொடுக்கலாம். முக்கியமாக இது செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பன்னீரைத் துருவி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து குறைவான தீயில் வைத்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய பன்னீரை சேர்த்து மசாலா ஒன்று சேரும் வகையில்
கிளறி, முடி வைத்து 3 நிமிடம் பன்னீரை வேக வைக்க வேண்டும்.
* அதிகமாக பன்னீரை வேக வைக்க வேண்டாம். இல்லாவிட்டால் பன்னீர் ரப்பர்
போன்று மாறிவிடும். எனவே 3 நிமிடம் ஆனதும் பன்னீரை இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி
தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











